சுகம் பிரம்மாஸ்மி – 1

இது ஒரு வெகுநாள் திட்டம். எழுத நேரம் கூடாமல் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு மேலாகவே சிந்தித்துக்கொண்டிருந்தேன். அவ்வப்போது பத்ரியிடம் மட்டும் பேசுவதுண்டு. எனக்கு மிகவும் நெருக்கமானவர்களாக நான் நினைப்பவர்களுள் முதன்மையான ஒருவரைப் பற்றி எழுதிப் பார்க்கவேண்டும். திரைகள், தடைகள் எதையும் அனுமதிக்காமல் மிகவும் நிர்வாணமாகச் சிந்தித்து, தோன்றியது தோன்றியபடி. இதில் என் புத்திசாலித்தனம் வரக்கூடாது. சாமர்த்தியங்கள் தெரியக்கூடாது. உணர்ச்சி மிகலாகாது. கற்பனை சேரக்கூடாது. இன்னும் உண்டு. அது பெரிய பட்டியல். ஆரம்பிக்கச் சமயமில்லாமல்தான் தள்ளிப்போட்டுக்கொண்டிருந்தேன். … Continue reading சுகம் பிரம்மாஸ்மி – 1